Lost Your Password?
Registration is disabled
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டியதில்ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டுமன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவன் உறங்க மயக்கத்திலே இவன் உறங்கமண்டலமே உறங்குதம்மா ஆராரோமண்டலமே உறங்குதம்மா ஆராரோ
நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்தாகமெல்லாம் தீர்த்துகொண்டான் தாலேலோ
அவன் மோகநிலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்யாரவனை தூங்கவிட்டார் ஆராரோயாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகை காண்பதர்க்கும் போதை முத்தம் பெறுவதற்கும்கன்னியரே கோபியரே வாரீரோகன்னியரே கோபியரே வாரீரோ
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோமாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…